சூப்புகள், புலவுகள், குர்மாக்கள், புட்டிங்குகள் என்று 150 உணவு தயாரிக்கும் வழிகளை, வேண்டிய பொருட்கள், செய்யும் முறை, பரிமாறும் பக்குவம் போன்ற அனைத்து விவரங்களுடனும், அநுபவரீதியாகச் செய்தறிந்த கைபாகத்திறன் பெற்ற இதன் ஆசிரியர் திருமதி. ஸீலக்ஷணா ராஜகோபாலன் அவர்கள் இந்தப் புத்தகத்தில் தெளிவாக விவரித்துள்ளார்கள்.