ஹலோ அம்மாயி குட்மார்னிங் ' என்று சிரித்துக்கொண்டே கூறிய வண்ணம்,அவசரம் அவசரமாக தன்னைக் கடக்கும் கொள்ளுப்பேத்தி நிரஞ்சனியை மீனாட்சி அம்மாயி அதிசயமாகப் பார்த்தாள். பள்ளிச் சீருடூயும் புத்தகக்கட்டுமாகச் செல்லும் பேத்தி, பள்ளிக்கு செல்ல வேண்டிய பாதையில் செல்லாமல், அதற்கு நேர் எதிர் பாதையில் செல்கிறாளே என்று எண்ணிய வண்ணம் மலையருவியை உற்றுப் பார்த்தாள்.