வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைய வேண்டும்.பலரும் மெச்சத்தக்க வகையில் வாழ வேண்டும்.பேரும் புகழும் பெற்று வாழவேண்டும். பிறவிப் பயன்பெற முந்த வேண்டும்.அது மட்டுமல்ல, நம் வாழ்நாளுக்குப் பிறகும் நம்முடைய பெயர் நிலைத்து நிறக வேண்டும். இவையே நம் ஒவ்வொருவருடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த வகையில் விளங்க ,யான் அறிந்து ,உணர்ந்த பல கருத்துக்களை இச்சிறு நூலில் வழங்கி இருக்கின்றேன். இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் படிப்பவர் மனதில் பசுமரத்தாணிபோல் நன்கு பதிந்து,அவரை சிறப்பாக வாழ்வித்து,முக்திக்கு வழிகாட்டும் என்று நம்புகின்றேன்.