ஒரு மெகா சைஸ் நாவலின் இரண்டாம் பாகம் இந்த மேலே உயரே உச்சியிலே தினபூமியில் தினமும் எழுதப்பட்டபோதே பரபரப்பாக பேசப்பட்டது. இப்பொழுது புத்தகமாக வந்துள்ளது. விறுவிறுப்பை மட்டுமே மனதில் கொண்டு இந்த தொடரை எழுதினேன். தொலைக்காட்சியில் தினமும் பெகா தொடர் வருவது போல தினசி தாளிலும் வந்தால் எப்படி இருக்கும் என்கிற யோசனையில் செய்யப்பட்டது.நல்ல வெற்றிக் கண்டது. தொடராக வந்த போது அடைந்த வெற்றியை விடவும் புத்தகமாக வந்த போது இன்னும் வெற்றி கூடக்கிட்டியது எனலாம்.