ஆன்மிகத் தளத்தில் மாபெரும் மாற்றத்தை விதைத்த சான்றோர்கள், அருளாளர்களின் அருட்செயல்களை எடுத்துக் கூறுவதாக, 'ஆன்மிகத் தளத்தில் புரட்சியாளர்கள்' எனும் இந்நூல் அமைந்துள்ளது. ஆன்மிகம் என்பதை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் செய்த அருஞ்செயல்களை இந்நூல் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. தீண்டாமை ஒழிப்பு என்பது ஆன்மிகத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதையும் இந்நூலின் கட்டுரைகள் ஒவ்வொன்றும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
- திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,
பேரூராதீனம், கோயம்புத்தூர்