ஆன்மாவின் வாழ்க்கை எவ்வளவு உற்சாகம் அளிக்கக் கூடியது. எவ்வளவு அனுபவம் தரக் கூடியது என்று உன்னைக் காணச் செய்ய விரும்புகிறேன். அது எல்லையற்றது. அது மகிழ்ச்சியானது. அதுபோன்று ஒன்றே ஒன்று தான் இருக்கிறது: எப்போதென்றால் நீ விமானத்தில் மேலே மேலே போகிறாய், முடிவில்லா ஒன்று உன்னைச் சூழ்ந்து கொள்கிறது அப்போதுதான். எல்லையற்ற வெளியில் நீ மயங்கி விடுகிறாய். உனக்கு எப்படிப்பட்ட மனக்கிளர்ச்சி ஏற்படுகிறது என்றால் அதனை உலகின் எல்லா சக்திக்காகவும், புகழுக்காகவும் ஈடு கொடுக்க மாட்டாய்.