கதையின் நாயகி லிசா ஆண்கள் வர்க்கத்தை முற்றிலும் வெறுப்பவர். காரணம் அவருடைய இரண்டு சகோதரிகளுக்கு நடந்த விபரீதம்தான். லிசாவின் நெருங்கிய தோழி மீனாட்சி. எதிர்பாராமல் மீனாட்சியின் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சியால் லிசாவின் நிலை தலைகீழாக மாறிப்போகிறது. தோழி மீனாட்சியின் குழந்தையை வயிற்றில் சுமக்கும் நிலைக்கு ஆளாகிறாள். இதனால் மீனாட்சி மற்றும் லிசாவின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்களும் லிசாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெற்றோர் யார் கேள்விக்கான விடையையும் தெரிந்துக்கொள்ளவோம்…