ரேவதி, சுமதி இருவரும் சகோதரிகள். தங்களின் தாயார் மாரடைப்பில் இறந்துபோன பிறகு தன் தந்தையின் பாசத்தால் வளர்கின்றார்கள்.
தன் தாயின் இறப்பால் மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறாள் சுமதி. தங்களுடைய தந்தையும் இறந்து போகவே, தங்களின் சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.
அங்கு தான் ஆரம்பமாகிறது பிரச்சனை. சுமதியின் நடவடிக்கைகள் அனைத்தும் திகில் நிறைந்தவையாகவே இருப்பதைக் கண்டு அச்சம் கொள்கிறாள். தினமும் ஒரு திகில் சம்பவம் செய்துகொண்டிருக்கும் தன் தங்கையை மாற்றுவதற்கு அவள் எடுக்கும் முயற்சிகள் என்ன? பிறகு அங்கு வசிக்கும் இரண்டு காமக் கொடூரர்களின் கையில் தன்னுடைய தங்கை சிக்கிக்கொள்ளவே, அவளை காப்பாற்ற போராடுகிறாள். இறுதியில் தன்னுடைய தங்கையின் அந்த நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்து போகிறாள். அவள் அதிர்வுக்கு காரணம் என்ன? திகில் அனுபவத்தை பெற இக்கதையை வாசிப்போம்…