ஷெர்லக் ஹோம்ஸ் வரிசையில் வெளிவந்த துப்பறியும் நாவல்களில் நான்காவது நாவலான The Valley Of Fear சர் ஆர்தர் எழுதிய கடைசி நாவல். 1915இல் வெளிவந்த இந்த ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பே அச்சப் பள்ளத்தாக்கு இருவேறு உலகங்களை ஒரேநாவலில் படைத்து, கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் இணைத்து எழுதும் கலையில் கைதேர்ந்த கலைஞனாய் வெளிப்படுகிறார் சர் ஆர்தர். மரணமும் மர்மமும் துப்பறியும் ஷெர்லக் ஹோம்ஸ்க்கு விடும் சவால்களுக்கு அளவில்லை. படிப்பவரைப் பதற்றம் பற்றும்.