இன்பம், துன்பம், மகிழ்ச்சி, சோகம், கோபம், வெறுப்பு, ஏமாற்றல், வஞ்சித்தல், நட்பு போற்றல், சண்டையிடுதல் போன்ற மனிதப்பண்புகளை விலங்கு, பறவைகளின் மேல் ஏற்றி ஆங்கில ஆசிரியர்களால் எழுதப்பட்ட ஜப்பான் நாட்டுக்கதைகளை சொ.மு. முத்து அவர்கள் சிறப்பாக மொழியாக்கம் செய்து 'ஜப்பானிய தேவதைக்கதைகள்' என்ற நூலை வெளியிட்டுள்ளார். ஜப்பான் எழுத்தாளர்களின் கதையமைப்பு, பாத்திரப்படைப்பு, கதைகூறும் நீதி போன்றவற்றின் தன்மைகளை நம் நாட்டுக் கதை அமைப்புக்களோடு ஒப்பிட்டுப் பார்க்க ஓர் அரிய வாய்ப்பாக இக்கதை நூல் அமைக்கிறது.