நாம் எங்குச் செல்லுகிறோம் என்பதலல் சிந்தனை. எல்லோரும் ஓரிடமும் நோக்கியே செல்கிறோம். செல்லும் பாதைகள்தான் பல கோணங்களில் இருக்கின்றன. பேராறும், சிற்றாறும் ஒரு குறித்த எல்லைக்குள் சங்கமிப்பதைப் போன்று நாமும் கால் நடையாகவும் கட்டை வண்டியிலும் பேருந்துகளிலும் விமானமூலமாகவும் செல்கிறோமே இந்த ஏற்றத் தாழ்வுப் பயணத்தின் விளைவுகளை அனுமானிப்பதே பகுத்தறிவின் இலக்கணம்.