நாட்டுக் கதைப்பாடல் வெளியீடு ஆறாவதாக 1974 ஆம் ஆண்டில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக நா.வா. பதிப்பித்து அளித்தது தமிழ் உலகிற்கு மிகப் பெரிய ஒரு கொடையாகவே இருக்கிறது. இந்நூலின் முன்னுரையில் கதைச் சுருக்கம், ஆய்வுரையில் கதை நிகழும் காலம், வரலாற்று மூலங்கள், பிற கதைகளுடனான தொடர்பு ஆகியன கூறப்படுகின்றன.