இக்கதைப் பாடல் எழுத மூன்று பிரதிகளைப் பயன்படுத்தியுள்ளேன். 60 ஆண்டுகளுக்கு முன் வெளியான பழைய அச்சுப் பிரதியொன்று - இது சென்னையில் வெளியானது. இப்பிரதியை மயிலை சீனிவெங்கடசாமி அவர்கள் எனக்கு அனுப்பினார்கள். நெல்லையில் ஒரு கையெழுத்துப் பிரதி கிடைத்தது. இதுவும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கலாம். அதில் எழுதிய ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. இவையிரண்டையும் ஒப்பிட்டு இந்தக் கதைப்பாடலில் மூலம் எழுதப்பட்டிருக்கிறது.