இன்றைய அரசியல் பண்பாட்டுச் சூழல், அதிகாரப் பகிர்வுமிக்க மைய விலக்கம் கொண்ட - கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான திசையில் போய்க்கொண்டிருக்கிறது. தேசியவாதம் என்ற சொல் ஒற்றைமயப்படுத்தலுக்கு ஆதரவான குரலாக முன்மொழியப்படுகிறது. சோசலிச ஜனநாயகம் என்கிற ஆரம்பகாலத் தொடக்கத்திலிருந்து விலகி, இந்திய அரசியல் வேறுதிசை நோக்கிப் பயணிக்கிறது. இவற்றை விமரிசிக்கும் வகையில் சமகால இந்திய அரசியலின் கூர்நோக்கு விமர்சகர்களான திரு. ஆனந்த் டெல்டும்ப்டே. திரு. டி.ராஜா ஆகியோர் ஆங்கிலத்திலும் திரு. பிணறாயி விஜயன் மலையாளத்திலும் எழுதிய கட்டுரைகள் ஒரு பொருள் பற்றிய விவாதத் தன்மை கொண்டவை என்கிற அடிப்படையில் மொழிபெயர்த்துத் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெறுகின்றன.
- பா. ஆனந்தகுமார்