கலைப்படைப்பு என்பது கற்பனை ஆற்றலையும் மையமிட்டது. கலை என்பது எது? அதை யார் தீர்மானிப்பது? அதற்கான அளவுகோல் என்ன? என்பது போன்ற வினாக்கள் இயல்பாகவே எழலாம். ஒன்று தன்னளவிலேயே கலையாக இருகிறதா? அல்லது அதை நுகர்வோர், பார்ப்போர், கேட்போர்… தீர்மானிக்கிறார்களா? ஒருவருக்கு உன்னதமான கலைப்படைப்பாக இருப்பது, மற்றொருவருக்கு ஒன்றுமில்லாததாக ஆகிவிடுவது எதனால்? இப்படி பலவாறான வினாக்கள் எழுகின்றன.