சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். அது எக்காலத்து நூலாயினும், அன்றும் இன்றும் ஈடும் இணையுமில்லாப் பொதுமறையாகப் போற்றப்படுகின்றது.