நம் நாட்டில் வழங்கப்பட்டுவரும் நாடோடிக் கதைகளைப் போலவே உலக நாடுகள் பலவற்றிலும், பல்வேறு மொழிகளில் கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்தக் கதைகள் வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் சொல்லப்படவில்லை. அந்த நாட்டின் கலாசாரம், பண்பாடு, நாகரிகம், மக்களின் இயற்கை குணம், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்றவற்றை மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்காகவும் சொல்லப்பட்டன.