சிறை என்னும் ஒரு துளி உலகத்தில் வர்க்கத்தால் மற்றும் பண்பாட்டால்
தாழ்வுற்றிருந்த மனிதர்களிடையே வாழநேர்ந்த ஒரு உயர்குடி மேன்மகன்
அவர்களுடனான தொடக்க கால முரண்களைக் கடந்து,அவர் மெள்ள மெள்ள அந்தச்
சூழ்நிலையோடு பொருந்திப் போவதின் நுட்பம், கதைப்புலத்தில், அசைவற்ற ஆழ்
நதியாக நகர்ந்து போக. அதன் இருபுறமும் பிரிந்து செல்லும் கிளை ஆறுகளாக மற்ற
மனிதர்களின் கதைகள் தொடர்புபெறுகின்றன.
விலங்குச் சங்கிலிகளால்பிணைக்கப்பட்டிருக்கும்அந்த மனிதர்கள் பல வகை
உளவியல் தன்மை கொண்டவர்கள். வெவ்வேறு குண இயல்புடையவர்கள் அவர்களது
அச்சங்கள் உறக்க அலறல்கள். துயரங்கள் கோபங்கள் பழைய வாழ்க்கை நினைவுகள்
வீட்டைப் பற்றிய ஏக்கங்கள் விடுதலைக்கான கனவுகள் என்னும் இருளடர்ந்த
பாதையிலிருந்து சுதந்தரத்தின் ஒளியை நோக்கிய நெடிய வழித்தடத்தில் ஒவ்வொரு
மனிதனையும் ஒவ்வொரு நிகழ்வையும் உளவியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார்
தஸ்தயெவ்ஸ்கி இந்த நாவலை வாசிக்கும் எந்த ஒரு மனிதரின் இதயமும் காருண்யத்தால் கனிந்துவிடும்.