பெண்ணிய அலைகள்:
முதல் அலை (1848 - 1920) - பெண்களின் வாக்குரிமைக்கும் கல்விக்குமான போராட்டங்கள் எழுச்சிகரமாக நடந்த காலகட்டம்
இரண்டாம் அலை (1963 - 1980) - ஆண் பெண் பாலின பாகுபாட்டு வேலைகளுக்கு (Gender roles) எதிரான போராட்டங்களின் காலகட்டம்
மூன்றாம் அலை (1990கள்) - பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்களையும், அதிகார மையங்களில் பெண்களின் தாழ்நிலையையும் எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்ற காலகட்டம்.
இவற்றுள் முதல் அலையின் போது வெளியான நூல்களில் சிறந்த நூலாகக் கருதப்படுவது "The second sex"(1949) என்கிற நூலாகும். அதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்பே, "பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புரட்சிகர நூலை பெரியார் எழுதி வெளியிட்டிருந்தார். இவ்விரண்டு நூல்களையும் ஒப்பீடு செய்துள்ள மனநல மருத்துவர் ராதிகா முருகேசன், இதனை "அன்றே சொன்னார் பெரியார்" என்ற தலைப்பில் நூலாக்கம் செய்துள்ளார். 10 அத்தியாயங்களைக் கொண்டதாக நூல் உருவாகியுள்ளது