மதமும், அறிவியலும் அன்றைய காலம் முதல் இன்றுவரை மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகிக் கொண்டுதான் வருகிறது. மனிதன் முதன்முதலில் நெருப்பு கண்டுபிடித்ததிலிருந்து மதத்திற்கும், அறிவியலுக்கும் போட்டியையும் சர்ச்சையையும் உண்டாக்கிய வண்ணம் இருந்து வந்துள்ளது. அறிவியலானது அறிவு சார்ந்த செயல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அறிவியல்முறை ஆய்வுக்குட்பட்டது மற்றும் எதார்த்தமானது. மதமானது நம்பிக்கை சார்ந்தது மற்றும் புனிதமானது என்று பிரிக்கப்படுகிறது. எனினும் இரண்டும் வெவ்வேறானது என்று பல்வேறு அறிஞர்கள் கூறுகின்றனர்.