இன்றைய குழந்தைகளின் நாளைய உயர்வை உயர்வை மனத்தில் கொண்டு உருவாக்கப்பெற்ற பல நூல்கள் அவரின் பெருமைக்குச் சான்றாகும். நல்ல பண்புகளையும், தன்னம்பிக்கையையும், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதலையும மையமாய்க்கொண்டு அவர் எழுதிய எழுத்துகள் இன்றும் என்றும் குழந்தைகள் நெஞ்சில் நின்று நிலைக்கும் ஆற்றல் வாய்ந்தவை. இவ் ஆண்டு அவரது நூற்றாண்டு, அதன் நினைவாக அவருடைய படைப்புகள் அனைத்தையும் தொகுதிகளாகப் பதிப்பித்து வெளியிட முடிவு செய்யப்பெற்று, முதலில் 4 நூல்களைக்கொண்ட 'சிறுவர் கதைக்களஞ்சியம்' என்னும் நூல் இன்று வெளியிடப்பெறுகிறது. குழந்தைகள் விரும்பிப் படிக்கும் அவர் எழுதிய மற்ற நூல்களும் தொடர்ந்து வெளிவர உள்ளன.