வைராக்கியம்
இருப்பவர்களுக்கு வாழ்க்கை ஒரு தவம். அவர்கள் எதைச் செய்தாலும் அது
தியானம் போல இருக்கும், அவர்களை எந்த வகையிலும் கவனம் சிதற வைக்க இயலாது.
அவர்கள் படிக்கும்போது அருகில் சூறாவளி சுழன்றடித்தாலும் விழிப்புணர்வு
மாறாது. அவர்கள் குறிப்பிட்ட பணியைக் குறிப்பிட்ட காலத்தில் முடிப்பது என
முடிவு செய்துவிட்டால், அதில் சிறிதும் பின்வாங்காமல் ஆற்றலைத் திரட்டி
ஆளுமையுடன் திகழ்வார்கள்.