கவிக்கோ ஞானச் செல்வன், (பிறப்பு:1939) இந்தியா, தமிழ்நாடு, தஞ்சாவூர்
மாவட்டம், மதுக்கூர் என்னும் ஊரில் பிறந்தவர் ஆவார். இயற்பெயர் கோ.
திருஞானசம்பந்தம் ஆகும். மரபுக் கவிஞர். தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றத்தின் திருவாரூர் மாவட்டக் கிளையின் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
உலகத் தமிழ் மாநாடுகளில் தங்கம், வெள்ளிப் (மதுரை) பதக்கங்கள், கேடயம்,
சிறப்பு விருதுகள் எனப் பல்வேறு பாராட்டுக்களைப் பெற்றவர்.