தன் கையை மீறிப் போய்விட்ட அல்லது தன்னால் கட்டுப்படுத்தவியலாத அதிகாரத்தின் அச்சுறுத்தல் குறித்து ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியது என்ன? தன் சிறுவத்தை இளமையைத் தின்று துப்பிவிட்டுத் தசாப்தங்களாய்த் தொடர்ந்த யுத்தம் மற்றும் அதிகார மையங்களினால் தீர்மானிக்கப்பட்ட தன் வரலாற்றின் மனிதராய் எஸ்போஸ் தொடர்ந்து அதிகாரத்தை வெறுப்பவராகவும் கேள்வி கேட்பவராகவும் தனது பிரதிகளில் உழன்றிருக்கின்றார். இதற்காய் தான் ஒரு நாள் தண்டிக்கப்படலாம் எனும் அச்சமும் பதைபதைப்பும் இருப்பினும் என்னைப் பேச விடுங்கள் என்பதாயே அவரது குரல் ஒலித்திருக்கிறது.