நாங்கள் வாழ்ந்த எல்லா வீடுகளுக்கும் கருணா வந்து தங்கியிருக்கிறான். பத்தமடையில் நாங்கள் வாழ்ந்த காலத்தில் வீட்டைச் டுத்தம் செய்யும் நாட்களில் அவனும் லட்சுமிகாந்தனும் எனக்குத் துணை நின்ற நாளில் வீட்டுக்குள் நள்ளிரவில் பாம்பு வந்துவிட்டது. லட்சுமிகாந்தனின் பதட்டமும் கருணாவின் அட… பாம்புதாபே… என்கிற அலட்சியமும் இன்றும் மனதில் நிற்கின்றன.