வரித் திரட்டும் திறனில் ஒப்பீடளவில் முன்னேறியுள்ள தமிழ்நாடு, குடும்பக்கட்டுபாட்டில் முதல் வரிசை மாநிலமாக உள்ள தமிழ்நாடு, சமூக அமைதியில் நிலைபெற்றுள்ள தமிழ்நாடு அந்தக் காரணத்திற்காகவே தில்லி வல்லரசால் தண்டிக்கப்படுகிறது. தில்லி ஏகாதிபத்தியமோ பிரித்தானிய ஏகாதிபத்தியத்தையும் விட கொடிய கொள்கையை தமிழ்நாட்டிலிருந்து நடத்துகிறது. தமிழ் நாட்டின் நீர் வளத்தை, நில வளத்தை, கனிம வளத்தைக் கொள்ளையிட்டு உலக நாடுகள் எங்கும் ஏற்றுமதி செய்வதற்காக திணிக்கப்படும் தொழில் வீக்கம்!