நூலாசிரியர் முனைவர் இரா.சத்தியமூர்த்தி காரைக்குடியிலுள்ள அழகப்பா
பல்கலைக்கழகத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கல்விச் சிந்தனைகள் குறித்து
ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். கிருஷ்ணமூர்த்தியின் மீது அதிகமான
ஈடுபாடு உடையவர் மட்டுமல்ல, அவரை நன்கு புரிந்து கொண்டிருப்பவர்களில்
சத்தியமூர்த்தி மூன் வரிசையில் இருப்பவர் என்று கூறலாம்.
இந்நூலின் தொடக்கத்தில் புத்தரைப் பற்றி விரிவாக விவரிக்கிறார்; புத்தரின்
மறு அவதாரம் ஜே.கே. என்று நம்பிக் கொண்டிருப்பவர் பலர் என்பதை
நினைவுபடுத்துவதாக உள்ளது. சித்தர்கள் பலரை முன் இருத்துகிறார்;
சித்தர்களின் சித்தர் ஜே.கே. என்று சொல்லாமல் சொல்கிறார். குறட்பாக்கள்
பலவற்றை எடுத்துக்காட்டுகிறார்; ஜே.கே.யின் போதனைகள் சிலவற்றுக்கும்
திருக்குறள் காண்பிக்கும் அறநெறிகள் சிலவற்றுக்கும் ஒற்றுமை உள்ளது என்பதைக் காண்பிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்,