பனிப்புற்கள் வகுத்தளித்த பாதையில் விரைகிறான் சேவகன், வென்பனிப்புற்களுக்கும், குதிரைக்கும் வீரனின் கையிலிருக்கும் தாக்கீது எவ்வளவு முக்கியம் என்பது தெரிந்திருக்கும். சில நொடிகளில் மரணக் குகையில் வீழ்ந்திட வரிசையாக நிற்கிற இருபத்தியோரு இளைஞர்களின் உயிரையும் காப்பாறிடப் போகும் தகவல் அது. காலத்தை நொடி, நொடியாக கரைத்தபடி விரைகிறது குதிரை.
...பெருவெளியெங்கும் காலம் உருவாக்கி வைத்திருக்கும் பிடிகயிறுகள் ஊசலாடுகின்றன. சிலருக்கு கடவுள் சிலைகளாகவும் கூட அவைகள் இருக்கின்றன. காலமெல்லாம் இலக்கியம், சமூகம், அரசியல் என இயங்கிக் கொண்டிருப்போருக்கு புத்தகத்தை தவிர வேறு எந்த பற்றுக்கோலும் இருப்பதாகத் தெரியவில்லை. அவையே நம்மைக் கடைத்தேற்றுகிற நம்பிக்கைகளாக இருந்து வருகின்றன.