மதம் மக்களின் அபின் - இது கார்ல் மார்க்ஸ் கண்டடைந்தது. போதையில் மூழ்கிய பின் நிஜப் பிரச்சனைகள் பொருட்டில்லை. அப்படித்தான் மதப் போதையில் மயங்கிய இந்து, இந்தி, இந்திய மக்களினால் அரசியல் சீரழிகிறது. இக்கட்டுரைகள் 2014ம் ஆண்டு நரேந்திர மோடி அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் பாரதப் பிரதமராக ஆட்சியில் அமர்வதற்கு முன்பும் பின்பும் பல்வேறு ஊடகங்களில் எழுதப்பட்டவை. இந்துத்துவம் அதிகாரத்துக்கு வந்தால் நிகழப் போகும் பிறழ்வுகளை அப்போதே துல்லியமாகவும் தெளிவாகவும் எச்சரித்தவை. இன்று மீண்டும் வாசித்துப் பார்க்கையில் இவற்றில் பல தீர்க்க தரிசனங்களாகச் சொல்லப் பட்டிருப்பதைப் பெருமூச்சுடன் உணர முடிகிறது.