நவகுமாரரும் அவருடைய தரும பத்தினியும் பல வருஷ காலங் கழித்து மறுபடியும் தேவிபுரத்துக்கு வந்தார்கள். வெகுநாள் பரியந்தம் தாம் இழந்திருந்த மன்ன்னைத் திரும்பவும் தமது நாட்டில் வரப்பெற்ற தேவிபுரப் பிரஜைகளுக்குப் பரமசந்தோஷம் உண்டாயிற்று. ஊரெல்லாம் ஒரே ஆனந்தம். எங்கே பார்த்தாலும் குதூகலம்.