பாலவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் சுதர்சனத்தின் வீட்டிற்கு மூன்று திருடர்கள் வருகின்றனர்.
பலமுறை கடத்தப்பட்ட சுதர்சனத்தின் முதலாளி பஞ்சாபகேசனின் மகன் முரளியை கடத்தி வருகின்றனர்.
கடத்தலைப் பற்றி தெரியாத திருடர்கள், அவர்களுக்கு உதவி செய்யும் மச்சான் உப்பிலி அப்பாவிடமே
அதிக பணம் கேட்கச் சொல்லும் முரளி. அங்கு நடப்பதை அப்படியே கதையாக எழுதும் எழுத்தாளர்
ஏகலைவன், அவர்களுக்கிடையே மாட்டிக் கொண்டு தவிக்கிறார் சுதர்சனம், பிள்ளையார் கோவிலிலிருந்து
பணப்பெட்டியை எடுக்கப்போகும் சுதர்சனம், முதலாளி பஞ்சாபகேசனிடம் மாட்ட பிள்ளையாரே
பணப்பெட்டியுடன் ஓடி விடுகிறார். பிள்ளையார் வேடத்தில் வீடுவரும் உப்பிலியிடமிருந்து பணத்தை
பெற்றுக்கொண்டு திருடர்கள் வெளியேற மீண்டும் அதே முரளியை கடத்திக் கொண்டு வேறொரு
கோஷ்டி உள்ளே நுழைகிறது.