காட்பாடி கனகசுந்தரத்தின் ஒரே மகனான தம்பி ராஜா என்கிற தம்பி
சென்னையில் தனது தந்தையின் காலனியில் வரும் வாடகை பணத்தைக் கொண்டுவாழ்ந்து
கொண்டிருக்கிறான். ஒரு தரகரின் மூலமாக அண்ணாசாமியின் மகள் பாப்பாவை பெண்
பார்க்கிறான். ஒரு தடவையாவது ஜெயிலுக்கு சென்று வந்தரைத்தான் திருமணம்
செய்வேன் என ஒரு நிபந்தனையை பாப்பா கூற, வேலையில்லாமல் போலீஸ் வேடம்
தரித்து உலா வரும் ஒரு நாடக நடிகன் மற்றும் கைதி எண்ணாயிரத்தின் மனைவி
நளாயினி, மகன் கஜா மற்றும் மகள் பிக்பாக்கெட் பிரமிளா இவர்களை பயன்படுத்தி
திருமணம் முடிக்கும் வேளையில் நிஜ அப்பா வர குழப்பமான சூழ்நிலை உருவாகிறது.
இறுதியில் ராஜா அனைத்துப் பிரச்சனைகளையும் சமாளித்து பாப்பாவை திருமணம்
புரிகிறான்.