ஜோதிடக் குறிப்புகளும், வைத்தியக் குறிப்புகளும் ரகசியம், ரகசியம் என்று பாதுகாத்தே அழித்து விட்டார்கள். அந்த உன்னதமான ஜோதிடக் கலையை பரப்பும் வகையில் சிவஞான ஜோதிட ஆராய்ச்சி மையம் என்ற ஒன்றை ஏற்படுத்தி ஜோதிடத்தை பலருக்குக் கற்பித்து வருகிறேன். அதன் இன்னொரு பணியாக பல இடங்களில் சென்று பல்வேறு மிகப் பழமையான ஜோதிட நூல்களை சேகரித்து வைத்திருந்தேன். இதனைப் பதிப்பித்து வெளியிட்டால் பலருக்குப் பயன்படுமே என்று எண்ணியிருந்த வேளையில் சென்பகா பதிப்பகத்தின் நிறுவனர் திரு.ஆர்.எஸ். சண்முகம் அவர்கள் இந்நூலுக்கு தெளிந்த உரை எழுதித் தருமாறும், அதை புத்தகமாக வெளியிடுவதாகும் கூறினார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கௌரி சங்கர்
சிவஞான ஜோதிட ஆராய்ச்சி மையம்.