எல்லா வகையான சிக்கல்களுக்கும் நிரந்தரத் தீர்வினைப் பெற ஒரே வழி அதைப் பற்றி நாம் உளவியல் சார்ந்து சிந்திப்பதே!. இதுதான் ஈசாப் நீதிக்கதைகள் நமக்குப் புகட்டும் பாடம். இவரின் கதைகளில் '' வரும்முன் காத்தல்'' என்ற தற்காப்பு உத்தியே மெரும்பான்மையாக இடம் பெற்றுள்ளது. ஆம்! வந்த பின்னர் வருந்துவதைவிட, வரும் முன் சிந்தித்து, அதிலிருந்து தப்பித்து, விலகிச் செல்வதுதானே நல்லது! நமது ஒளிமயமான எதிர்காலம் நம் எதிரிகளிடமில்லை. அவர்களுக்குப் பின்னால் வெகுதொலைவில் உள்ளது, ஆதலால், நாம் நம் எதிரிகளிடமிருந்து விலகுவது ஒன்றே சிறந்த வழி.
இருளில் நமக்கு முன்பாகத் தீப்பந்தம் பிடித்து, மெல்ல நடந்து செல்லும் மூதாதையர்தான் ஈசாப். அவர் ஏந்தியிருப்பது நீதியின் ஒளி. அவரின் ஒளிகாட்டலில் நாம் நமக்கான வழியினைக் கண்ட்டையலாம்.