மொழி வளமும் மள வளமும் நிறைந்த தமிழகத்தை விஜயநகர மன்னர்கள் ஆண்டனர் என்பது
ஒரு வரலாற்றுப் பதிவு. விஜயநகர ஆட்சியில் நாயக்க மன்னர்கள் பலர் நல்லாட்சி
புரிந்துள்ளனர். நாட்டின் நலத்தில் அக்கறையும் ஈடுபாடும் கொண்டு பல்வேறு
வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளார். விஜயநகரப் பேரரசர்களின் தலைநகரே
விஜயநகரம். இதன் தமிழ் வடிவமே வெற்றித் திருநகர். அந்நகரம் தென்னக
அரசியலாட்சியின் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தது எனலாம்.
தென்னகத்தின் முதல் தேசிய பேரரசாகத் திகழ்ந்தது விஜயநகரப் பேரரசு
என்பர். அது தென்னக எல்லையைத் தன் எல்லையாகக் கொண்டு நிலையான ஆட்சி
நடத்தியது. தென்னக மொழிகளை அளாவி நின்று, மொழி மண்டலங்களாகப் பிரித்துத்
தேசிய கூட்டாட்சி நடத்திய பேரரசு அஃது ஒன்றேயாம்.