பாரதப் பெருநாட்டின் தென்னக, தமிழகப் பரப்பில், குறிப்பாக,
அப்பரப்புகளின் நடுநாயகத் தலைமையிடமாய் அன்று விளங்கியது கொங்குத் தமிழகம்
ஆகும். கொங்கு நாட்டின் பல சிற்றூர்களில் கூட வெளிநாட்டு நாணயங்கள்
கண்டெடுக்கப்பட்டுள்ளதை அகழ்வாராய்ச்சிக் குறிப்புகள்
எடுத்துக்காட்டுகின்றன. கொங்குத் தமிழகம் பற்றி மேலும் பல அரிய செய்திகளை
இந்நூலில் சான்றுகளுடன் எடுத்துக் கூறியுள்ளார் நூலாசிரியர் கா.அப்பாத்துரை
அவர்கள். கொங்குத் தமிழக எல்லை, அதன் தனித்தன்மை, தனி வளம் பற்றியும்
நூலில் மேலும் விவரங்கள் கூறப்பட்டுள்ளன. முற்கால வரலாறு தெரிந்துகொள்ள
விரும்புவோர்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும். -பதிப்பகத்தார்.