தல்ஸ்தோய் மரணமடைவதற்க்குப் பத்து வருடங்களுக்கு முன்பு அந்தோன் செக்காவ் பின்வருமாறு எழுதினார். "...தல்ஸ்தோய் மரணமடைந்துவிட்டால் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் சூன்யம் ஏற்பட்டுவிடும்... அவர் இல்லையென்றால் நம்முடைய இலக்கியம் மேய்ப்பவன் இல்லாத ஆட்டுக்கிடையாகிவிடும்"