அன்பு நண்பர்களே! நான் கூறப்போகும் நீரழிவு நிஜங்கள் மற்ற எல்லா உண்மைகளோடும் பொருந்தும் விதமாக இருக்கிறதா இல்லையா என்பதை நீங்களே பார்க்க முடியும். உண்மையில், ஒருவருக்கு இரத்தத்தில் சர்க்கரயின் அளவு அதிகமாகி விட்டால், அவரின் நெற்றியில் எழுதி ஒட்டாத குறையாக அவரை வாழ்நாள் சர்க்கரை நோயாளியாக முத்திரை குத்திவிடுகிறார்கள். பின்னர் அன்றிலிருந்து அவர் வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுக்கவோ அல்லது ஊசி போடவோ தயாராக்கப்படுகிறார். ஆக, சர்க்கரை நோயாளியை வாழ்நாள் கைதியாக்கி, வாழ்க்கையை ஓட்ட மூளைச் சலவை செய்யப்படுகிறது. இந்த வாழ்நாள் அவலத்தை நீக்கவே இப்புத்தகம் எழுதப்படுகிறது.