கியூபாவில் 8 ஆண்டுகள் தங்கியிருந்த காலத்திலும், அதன்பின்பு அந்நாட்டிற்கு பலமுறை சென்றுவந்த காலத்திலுமாக ஏறத்தாழ 20 ஆண்டுகால அனுபவங்களை இந்நூலின் வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மக்களை மனிதத்தன்மை மிக்கவர்களாக ஆக்கவும் அவர்கள் ஏகாதிபத்தியங்களின் கைகளில் சிக்காதிருக்கவும் அசுர முயற்சி மேற்கொண்ட கியூபப் புரட்சியுடன் என்னை இணைத்துக்கொண்டிருப்பதால் அதன் திட்டங்களையும் செயல்பாடுகளையும் விமர்சனப் பூர்வமாக அணுகியாக வேண்டும்...
கியூப மக்களிடம் உரிமை இருந்திருந்தால், நிச்சயமாக தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கு எதிராகவோ அல்லது அன்றாடம் அம்மக்கள் பட்டினியாலும் இன்னபிற கொடுமைகளாலும் கொடுஞ்சிறை முகாம்களில் ஆயிரக்கணக்கில் பலியாவதையோ கண்டுகொள்ளாமல் இலங்களை அரசுக்கு ஆதரவாக வாக்களித்திருக்க மாட்டார்கள்...