'கம்பன்கலை' என்ற தலைப்பில் 'நாடும் மன்னனும் என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையே இந்நூலுக்கும் ஆம். மேனாடுகளில், திறனாய்வுக் கொள்கைகளைப் பயன்படுத்திக் காப்பியப் பாத்திரங்களின் இயல்புகளை ஆராய்வது உண்டு. இதனைத் திறனாய்வுப் பயன் (Applied criticsim) என்பர். அதே முறையில் கம்பனுடைய படைப்புக்கள் சில இந்நூலில் ஆராயப் படுகின்றன. 'அரசியர் மூவர்' என்ற தலைப்பில் கூனிக்கு இடம் ஏன் என்று கேட்கப்படலாம். ஆனால், கூனியை விளங்கிக் கொண்டால் ஒழியக் கைகேயியை நன்கு அறிய முடியாது. எனவே ஓர் அரசியை விளக்கும் பின்னணியாய் இருத்தலின் நன்கு அவளும் இத்தலைப்பில் இடம் பெறுகிறார்.