மனிதன் குடும்பங்களாக வாழத் தொடங்கிய போது வலிமையானவர்கள் எளிமையானவர்களை வதைக்காமல் இருக்க நீதி,மரபு,ஒழுக்கம்,சட்டம் போன்றவற்றை வனிவமைக்கத் தொடங்கினான். எளிய மனிதர்களை அன்போடு நடத்த வேண்டும் என்கின்ற எழுதப்படாத அறம் பல்வேறு சமூகங்களில் கசியத் தொடங்கியது.அதன் நீட்சியாக பிறந்ததே விருந்தோம்பல்.