நீர் திமிங்கலமாய் மாறி கடலளக்க விரும்பிய ஒருத்தியை அறிவேன்’ என்று பேசும் சசிகலா பாபுவின் கவிதைகள் உக்கிரமான காட்சிப் படிமங்களும் கொந்தளிக்கும் மன அலைகளும் கொண்டவை. இமைகளுக்குள் பெருகும் ரகசியக் கண்ணீரும் நெஞ்சின் ஆழத்தில் விழும் துயரத்தின் நிழல்களும் இத்தொகுப்பு நெடுக நுட்பமான உணர்வுகளை ஏற்படுத்துகின்றன.