பெரும் வரம்வேண்டி கடும்தவம் புரிவதாய் எண்ணி ஒற்றைக் காலை வெட்டிக்கொண்டது கடினமாய்த்தானிருக்கிறது மற்றொரு காலிருந்த இடத்திலிருந்து சொட்டிக்கொண்டிருகிறது உதிரம் ஒற்றைக்காலில் நெடுநேரம் நிற்பது சிரமமான காரியம்தான் கடவுள் தோன்றும் பட்சத்தில் இன்னொரு காலை வரமெனக்கேட்டலே போதுமானதாய் இருக்கும் இவ்வாழ்வில்.