தனிமையின் பெரு நதியொன்றின் அடியாழத்தில் யுகாந்திரங்களாய் கிடக்கும் புராதன சிற்பமொன்றைப் போல மௌனமாகத் ததும்பிக்கொண்டிருக்கின்றன சம்யுக்தா மாயாவின் கவிதைகள். அவை முறிந்த கனவுகளோடும் உடைந்த மனோரதங்களோடும் மிக அழமான உரையாடல் ஒன்றை வாசகனோடு நிகழ்த்துகின்றன. இயற்கையின், காலத்தின், பருவநிலைகளின் பல்வேறு உணர்வெழுச்சிகளை இந்தக் கவிதைகள் மிக ஆழமாகத் தீண்டுகின்றன.