அண்மைக்காலப் புனைவிலக்கியப் படைப்புகள் குறித்து பரந்தபட்ட பார்வைகளை உருவாக்குகிற ந.முருகேசபாண்டியனின் கட்டுரைகள் அடங்கிய இத்தொகுப்பு நூல் சமகால இலக்கியப்போக்குகள் குறித்த பரந்தபட்ட பார்வையை அளிக்கிறது. இளம் படைப்பாளிகளின் நாவல்கள், சிறுகதைகள் குறித்த பார்வைகள் தமிழின் புதிய போக்குகளை கட்டுகின்றன. நவீன தமிழ் வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் எவ்வாறு பதிவாகிறது என்பதை நுட்பமாக விவரிக்கும் இந்நூல் இளம் வாசகர்கள், ஆய்வாளருக்கு பெரிதும் பயன்படக்கூடியது.