'மனித உரிமைகள் என்ற கருத்துரு நீண்ட காலமாக உலகின் பல நாடுகளிலும் தோன்றித் தொடர்வதாகும். வல்லரசுகளின் கூட்டமைப்பிலும வளரும் நாடுகளின் ஒருங்கிணைப்பிலும் இது வற்புறுத்தப்படுகிறது. முடியாட்சிக் காலம் முதல் இன்றைய நாள் வரை தமிழ் இலக்கியங்களில் இது பற்றிய குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. உலகம் உள்ளளவும் மனித உரிமைப் போராட்டம் நிகழ்ந்தே வரும் என்பதுதான் முதலாளித்துவ வளர்ச்சியில் நாம் காண்பது. மாணவர்களும், பொது மக்களும் மனித உரிமைக்காப் போராட வேண்டும் என்பதையும் அப்போராட்டக் களங்கள் தமிழிலும் உலக இலக்கியங்களிலும் மையமிட்டிருப்பதையும் இந்நூல் தெளிவாக்குகிறது. நூலாசிரியர் ஆ. ஜெகதீசன் அவர்களின் இம்முயற்சி பாராட்டற்குரியது.