ஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல். அதிகாரங்களின் கோரைப்பற்கள் கடித்து குதறிய தமிழினத்தின் கதை. நாடற்றவர்களாக, நாதியற்றவர்களாக அலைந்து திரிந்த மக்களின் அவல வரலாறு. மலைச்சொல் விருது, அமுதன் அடிகள் விருது பெற்ற நாவல். இலங்கை காடுகளில் செத்து மடிந்த தமிழர்களின் துயரங்களுக்கு அந்த வனமே சாட்சி.