எழுத்து ஒரு எழுத்தாளனைப் பைத்தியக்குழியினுள் தள்ளிவிடத்தான் முயற்சிக்கும். ஆனால் அந்த எழுத்திற்குத் தெரியாது, ஏற்கனவே அவன் அங்குதான் கிடந்து குப்பையள்ளிக் கொண்டிருக்கிறான் என! இது சுத்தமான இலக்கியம்! இங்கு வேறெதுவுமில்லை! வேறெதுவும் எழுதவும் வரவில்லை என்பதால் இது ஆணித்தரமாக அடித்துச் சொல்லி சபைக்கு வருகிறது! எழுதிய எழுத்தாளன் காலங்காலமாக இலக்கிய வாசிப்பை மட்டுமே உள் வாங்கியவன் என்பதால் சுத்த இலக்கியம் இப்படித்தான் இருக்கணும் என்கிற முடிவை அவனே செய்து விட்டான்.