மோசமாக நடத்தப்பட்ட பண்ணை விலங்குகள் ஒன்றுகூடி சோம்பேறித்தனமும் ஊழலும் அதிகார வெறியும் கொண்ட ஆட்சியாளர்களை எதிர்த்தால் என்ன ஆகும்? விலங்குப் பண்ணை பிறக்கும். கிராமப்புறத்துப் பண்ணையிலிருந்து மனிதர்கள் தூக்கி எறியப்பட்டு விலங்குகள் அதைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரும் போது பண்ணையைச் சமத்துவத்தின் அடிப்படையில் நிர்வகிக்க வேண்டும் என்ற அவற்றின் பொற்காலக்கனவு விலங்குகளின் கண்முன்னே நொறுங்க ஆரம்பிக்கிறது. நெப்போலியன் மற்றும் ஸ்னோபால் என்ற இரண்டு பன்றிகளின் தலைமையில் நிகழும் விலங்குகளின் கலகம் நினைத்துப் பார்க்கமுடியாத விளைவுகளுக்கு இட்டுச்செல்லும் ஊழல்களில் போய் முடிகிறது.