"ஆமாம்!
நானும் ஒரு குமாஸ்தாவின் மகள்தான். என் பெயர் காந்தா. 'குமாஸ்தாவின் பெண்'
என்ற நாடகம் பார்த்திருக்கிறீர்களே, அந்த நாடகக் கதையிலே வரும்
குமாஸ்தாவின் பெண்ணுடைய பெயர் சீதா. அவள் சமுதாயக் கொடுமையால் செத்தாள்.
தற்கொலை செய்து கொள்கிறாள். அது நாடகத்தில் நடப்பது. நிசமாக நடந்ததல்ல.
நான் அதே விதமான கொடுமையால் சாகவில்லை. ஒருவனை, என் ஆசை நாயகனைச்
சாகடித்தேன். நாடகத்தில், பரிதாபத்துக்குரிய சீதா தற்கொலை செய்து
கொள்கிறாள். நான் பழிபாவத்துக்கு அஞ்சாதவள். கொலை செய்தேன்...